மத்தியப் பிரதேசத்தில் உள்ள மண்ட்லா மாவட்ட மருத்துவமனையில் நோயாளி இருக்கும் வார்டில் எலிகள் சுற்றித் திரியும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைலாகி வருகிறது. அந்த வீடியோவில், மண்ட்லா மாவட்ட மருத்துவமனையில் படுக்கையில் படுத்திருந்த ஒரு நோயாளியின் தலைக்கு அருகில் ஏராளமான எலிகள் சுற்றித் திரிந்து வருகிறது. இதை அடுத்து, அம்மாநில சுகாதார அமைச்சர் சம்பாதியா உய்கே மற்றும் மண்டலா மாவட்ட ஆட்சியர் சோமேஷ் மிஸ்ரா ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மருத்துவமனை நிர்வாகம் தூய்மை குறைபாடுகளை இருப்பதை ஒப்புக்கொண்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.